தற்போது கன்னட நடிகைகள் பலரும் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மரிஜுவானா என்று சொல்லப்படும் கஞ்சாவை சட்டபூர்வமாக்க கோரி சர்ச்சையை கிளப்பியுள்ளார் கன்னட நடிகை .
கன்னட நடிகை நிவேதிதா என்பவர் ஸ்மிதா என்ற பெயரில் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார் .இவர் கர்நாடகாவில் பிறந்தவர் .இவர் பெங்களூரில் பொறியியல் படிப்பை முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார் .பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன் பணியை தொடராமல் சினிமாவில் நுழைந்துள்ளார் .கன்னட திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் தமிழிலும் நடித்துள்ளார் .இவர் தமிழில் போர்க்களம், மார்க்கேண்டயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் துளசியை போன்று ,போதை தன்மை அதிகம் கொண்ட கஞ்சாவையையும் மருந்தாக பயன்படுத்தலாம் .மேலை நாடுகளில் மரிஜுவானாவை மருந்தாக சட்டபூர்வமாக உபயோகித்து வருகின்றனர் .நம்முடைய நாட்டிலும் சட்டப்பூர்வமாக்கினால் பயன்படுத்தலாம் என்று கூறி சர்ச்சையை உருவாக்கியுள்ளார் .இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிராக பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர் .
The Kannada actress has sparked controversy by demanding the legalization of cannabis, also known as marijuana, as many Kannada actresses are currently being arrested on drug charges.