இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்ற பொது ராமரின் தம்பி லட்சுமணன் அவரது காலணிகளை (மரக்காலணி) வைத்து ஆட்சி செய்து வந்தார் என்பதால் இந்த மரகாலணிகள் இந்து மக்களால் புனிதமாகப் பார்க்கப்பட்டுவரும் சூழ்நிலையில் இந்த மரகாலணிகள் அயோத்தியில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பம் 5 தலைமுறையாக அங்கு உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலணிகளை (மரக்காலணி) தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து கடை நடத்தி வரும் திரு.முகமது என்பவர் " நங்கள் இந்த தொழிலை ஐந்து தலை முறையாக செய்து வருகிறோம். என்னுடன் சேர்ந்து ஏழு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இது இந்து பக்தர்களுக்காக மர காலணிகளை செய்து விற்பனை செய்து வருகிறேன். என் முன்னோர்களும் இதனை செய்து வந்தனர் இதனை தொடர்ந்து நானும் செய்து வருகிறேன்.ஒவ்வொருவரின் பண்டிகைகளை சேர்ந்துதான் கொண்டாடிவருகிறோம். இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் என பிரித்து பார்ப்பதில்லை."
மேலும் ராமர் கோவில் இங்கு கட்டப்படுவதால் இன்னும் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறார். இவரின் இந்த செயல் மதங்களை தாண்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதால் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பல பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
Hindu people heap praise on Islamists in Ayodhya !!! The Islamic family living in Ayodhya has been making and selling shoes (wooden shoes) to the devotees who visit the temple there for 5 generations.