துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (7 .8 .2020 ) இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.
விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு 30 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விமான இரண்டாக உடைந்து நொறுங்கியது. இதில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் கேரள அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளா முதல்வர் பிரணாய் விஜயன் கேரளா அரசு தரப்பில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காப்பீடு திட்டங்கள் உள்ளதால், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க வழி உள்ளது மேலும் .விமான போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆய்வு அறிக்கை அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது
விமானப் பயணச் சீட்டு பெறும்போது பயண காப்பீடு வழங்கப்படும் அத்துடன் கிரெடிட் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டிருப்பதால் இழப்பீடு தொகை கிடைக்கும். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 75 லட்சம் முதல் அதற்குமேல் இழப்பீடு கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
Air India flight IX-1344 arrived at Kozhikode Karipur Airport from Dubai, Kerala last Friday (7.8.2020) night. A total of 191 people were on board, including 10 children.