தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் புஞ்சகுட்டா பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் அந்த பெண்ணுக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும். பின் திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து ஆகிவிட்டதாகவும் அதை தொடர்ந்து, விவாகரத்து பெற்ற கணவரின் குடும்பத்தில் உள்ள சில நபர்கள் தன்னை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும். கடந்த
சில ஆண்டுகளில் தன்னை 143 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அதில் சுமார் 42 பக்கங்களுக்கு FIR போடப்பட்டுள்ளது. அந்த FIR இல் 41 பக்கத்தில் 143 பேரின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் சில பெண்களும் அடங்கியுள்ளனர்.அதை தொடர்ந்து புகார் அளித்த அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
மேலும் இந்த வன்கொடுமை சம்பவத்தில் அரசியலில் உள்ளவர்கள், மாணவர்கள், தலைவர்கள், ஊடகத்தை சேர்ந்தவர்கள், திரைப்படம் மற்றும் பிற தொழில்களைச் சேர்ந்தவர்கள் எனக் பல பிரபலங்கள்மீதும் அந்த பெண் புகார் அளித்துள்ளது அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது
இதனை தொடர்ந்து புஞ்சகுட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது அந்த பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து நாங்கள்பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் குற்றவாளிகளையும் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
Police have registered a case under various sections in this regard. It also has an FIR of about 42 pages