சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் செல்போன் கடையை மூடுவது தொடர்பாக விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர்.
கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகச் கருதப்பட நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்றும் வருகிறது. இதனை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் பதவியேற்கவுள்ளார்.
தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்ற அனுமதிபெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழக அரசின் சிறந்த மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Sathankulam father and son of the deaths to the CBI - Chief Minister Palanisamy Action