ஈரோட்டில் பெருந்துறையில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனமான நந்தா கல்லூரியில் கடந்த சில தினங்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது .இந்த கல்வி நிறுவனத்தில் பள்ளிகள் ,கலை மற்றும் அறிவியல் கல்லூரி , பொறியியல் கல்லூரி மற்றும் ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளும் இயங்கி வருகின்றன .இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் அதிகமான ரொக்கம் வசூல் செய்து குறைவான தொகைக்கு மட்டுமே கணக்கு காட்டியதாகவும் 5 கோடிக்கும் மேல் கணக்கில் வராத தொகை உள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .அதுமட்டும் அல்லாமல் 150 கோடி அளவுக்கு கணக்கில் இல்லாத முதலீடு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில் வரி ஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்கள் தொடரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
Nanda College, the largest educational institution in Perundurai, Erode, has been undergoing an income tax audit for the past few days.