கோவை வெரைட்டி ஹால், திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ வயது 35 , தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கரோலின் வயது 31 , இருவருக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.
நேற்று காலை பிராங்க்ளின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் காயத்துடன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாகடர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
வெரைட்டி ஹால் ரோடு போலீசார் நடத்திய விசாரணையில், கரோலின் தன் கணவர் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில்,கத்தி கழுத்தில் இறங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அடகு வைத்த நகையை மீட்டு தர கேட்ட போது,இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காய் வெட்டும் கத்தியால் பிரங்களினை கழுத்து,வயிற்றில் குத்தியுள்ளார். கரோலினை போலீசார் கைது செய்தனர்.
Police have arrested the wife who stabbed her husband to death for refusing to return the jewelery as collateral.