தர்மபுரி அருகே அதியமான்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர் கிருஷ்ணன். இவர் நம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்டம் கலையை நன்கு அறிந்தவர்.
தான் கற்ற பாரம்பரிய கலையை இளைய தலைமுறைக்கு கற்று தர முடிவெடுத்து, இலவசமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதனால் அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் அந்த முதியவருக்கு தனி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அவரை பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம் " நம்ம பாரம்பரிய கலை என்னால் முடிந்த அளவு நம் இளைய தலைமுறைக்கா சொல்லி தந்தால், பின்னால் அவர்களும் நான்கு பேருக்கு சொல்லி தந்த நம் கலையை வளர்ப்பார்கள் " என்று பெருமையாய் கூறினார்.
இப்படிபட்ட குரு கிடைத்ததை எண்ணி மாணவர்களும் நெகிழ்ச்சியில் உள்ளனர். நம் கலையை விடாமல் செய்து வரும் அந்த குருவிற்கு பல பாராட்டுகள் தேடி வருகிறது.
Traditional silambattam game is trained in free of cost